Thursday, 9 July 2015

சல்மான் கானின் வாகனத்தில் இருந்த பெண் யார்..?


அரசியல்வாதி பாபா சித்திக்கி அளித்த இஃப்தார்
விருந்துக்கு வந்தபாலிவுட் நடிகர் சல்மான் கானின் காரில்
யாரோ ஒரு பெண் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால்
அந்த பெண் யார் என தெரியவில்லை.


பாலிவுட் நடிகர் சல்மான் கானின் படங்களை பற்றி மக்கள் எவ்வளவுபேசுகிறார்களோ அதே
அளவுக்கு அவரின் காதல், காதலிகள், திருமணம் பற்றியும்பேசுகிறார்கள். ஏனென்றாரல்
இன்னும் திருமணமாகாத சல்மான் வாழ்வில் காதல்வருவதும் போவதுமாகவே உள்ளது.


இந்நிலையில் தான் சல்மான் பெரியோர்களாக பார்த்து நிச்சயிக்கும்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி பாபா சித்திக்கிகடந்த 5ம் திகதி மாலை மும்பையில் இஃப்தார் விருந்து கொடுத்தார். அந்தநிகழ்ச்சியில் சல்மான் கான் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார்.


இஃப்தார் விருந்துக்கு நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸும் வந்திருந்தார். அவர்சல்மான் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசியதுடன் அவர்களுடன்அமர்ந்து உணவு சாப்பிட்டார். சல்மானுக்கும் ஜாக்குலினுக்கும் இடையேபிரச்சனை என்று கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.விருந்து முடிந்து சல்மான் அங்கிருந்து கிளம்புகையில் அவரது காரில் ஒருபெண் அமர்ந்திருந்தார்.


அவருடன் சல்மான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.காரில் இருந்த பெண் யார் என்று தெரியவில்லை. இதை பற்றி தான் பாலிவுட்டில்பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment